/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க தோன்றினால் கவனமா இருங்க! இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க தோன்றினால் கவனமா இருங்க!
இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க தோன்றினால் கவனமா இருங்க!
இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க தோன்றினால் கவனமா இருங்க!
இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க தோன்றினால் கவனமா இருங்க!

இதுகுறித்து, சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர் பிரபாகரன் கூறியதாவது:
முதுமை வயதை எட்டிய பின்னரே, பலர் ஆரோக்கியத்தை கண்டுகொள்ளவில்லையே என வேதனைப்படுகின்றனர். சிறுநீரக செயல் இழப்பு என்பது, இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சிறுநீரக தொற்று
யூரினரி தொற்று என்பதை இரண்டாக பிரிக்கலாம். சிறுநீரக தொற்று மற்றும் சிறுநீரக பிளாடர் தொற்று. சிறுநீரக தொற்று உயிரிழப்பு வரை ஏற்படுத்தி விடும். இதற்கு, விலாஎலும்பு வலி, குளிர்காய்ச்சல், ஆக்சிஜன் குறைவது போன்ற அறிகுறிகள் தென்படும். அவ்வாறு, இருப்பின் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். யூரினரி தொற்று என்றால் அடிக்கடி சிறுநீர் கழித்தல், எரிச்சல் போன்று இருக்கும். பொதுவாக, சர்க்கரை, ரத்த அழுத்தம்,கொழுப்பு அதிகம் உள்ளவர்கள் அதற்கான சிகிச்சை மற்றும் பரிசோதனைகளை மட்டுமே மேற்கொள்கின்றனர். இப்பிரச்னைகள் இருப்பின், ஆண்டுக்கு ஒரு முறையோ அல்லது டாக்டர் கூறுவது போலோ இரண்டு, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பரிசோதனை செய்து கொள்வது சிறந்தது.