Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ செவ்வாழை விலை உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி

செவ்வாழை விலை உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி

செவ்வாழை விலை உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி

செவ்வாழை விலை உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி

ADDED : மார் 26, 2025 09:11 PM


Google News
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில் செவ்வாழை விலை உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

கிணத்துக்கடவு சுற்றுப்பகுதியில், விவசாயிகள் தனிப்பயிராகவும், ஊடுபயிராகவும், வாழை சாகுபடி செய்துள்ளனர். அறுவடை செய்யப்படும் வாழைத்தார்கள் கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

அங்கு, கேரளா மற்றும் தமிழக வியாபாரிகள், உள்ளூர் வியாபாரிகள் வருகை அதிகமுள்ளதால், வாழைத்தார்களுக்கு அதிக விலை கிடைக்கிறது. நேற்று நடந்த ஏலத்தில், செவ்வாழை கிலோ - -85, நேந்திரன் --- 35, கதளி --- 40, ரஸ்தாளி --- 45, பூவன் --- 35, சாம்பிராணி வகை -- 45 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

கடந்த வாரத்தை காட்டிலும், தற்போது நேந்திரன், பூவன் மற்றும் கதளி வகை வாழைத்தார்கள் விலை கிலோவுக்கு 5 ரூபாய் குறைந்துள்ளது. மேலும், சாம்பிராணி வகை வாழைத்தார் விலை 5 ரூபாய் அதிகரித்துள்ளது.

வியாபாரிகள் கூறுகையில், 'செவ்வாழை மட்டும் கிலோ 85 ரூபாய் விலையில் விற்பனை ஆனது. உள்ளூர் வரத்து மட்டுமே இருந்தது. வரும் நாட்களில் இதே போன்று வரத்து குறைவாக இருக்கும் பட்சத்தில், மற்ற வாழைத்தார்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது,' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us