ADDED : அக் 02, 2025 10:51 PM
பெ.நா.பாளையம்:தமிழக பா.ஜ., தொழில்துறை பிரிவின் மாநில செயலாளராக ரவி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவர், கடந்த, 2012ம் ஆண்டு முதல் பா.ஜ.,வில் பணியாற்றி வருகிறார். இவர் ஏற்கனவே வடக்கு மாவட்ட தொழில் துறை பிரிவு தலைவராகவும், மாநகர் மாவட்ட தொழில் துறை பிரிவு பார்வையாளராகவும் பணியாற்றியவர். இதே போல பா.ஜ., கட்சியின் கோவை வடக்கு மாவட்ட ஓ.பி.சி., அணி மாவட்ட தலைவராக பாலசுப்பிரமணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர்களுக்கு பா.ஜ., நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.


