Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தக்கைப்பூண்டு செடிகளை பயிரிட அறிவுரை

தக்கைப்பூண்டு செடிகளை பயிரிட அறிவுரை

தக்கைப்பூண்டு செடிகளை பயிரிட அறிவுரை

தக்கைப்பூண்டு செடிகளை பயிரிட அறிவுரை

ADDED : மே 19, 2025 11:14 PM


Google News
பெ.நா.பாளையம்; மண்ணின் வளம் பெருக, தக்கை பூண்டு செடிகளை பயிரிட வேண்டும் என, வேளாண்துறை அறிவுரை வழங்கியுள்ளது.

பயிர்கள் நன்கு வளர, விவசாயிகள் ரசாயன உரங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் நாளடைவில் மண்வளம் நிரந்தரமாக பாதிக்கும் சூழல் ஏற்படலாம். அதை தவிர்க்க, மண்வளத்தை இயற்கையாக அதிகரிக்கும் வகையில், மண்ணுக்கு தழைச்சத்தை கொடுக்கும் தக்கை பூண்டு செடிகளை பயிரிட வேண்டும் என, வேளாண்துறை விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

இது குறித்து, வேளாண் துறையினர் கூறுகையில்,' குறிப்பிட்ட பயிரை அறுவடை செய்தவுடன், இன்னொரு பயிரை பயிரிடுவதற்கு முன் உள்ள இடைவெளியில் மண்ணின் வளத்தை இயற்கையாக பெருக்க தக்கை பூண்டு பயிரிடலாம். இச்செடிகள், 45 நாட்கள் முதல், 80 நாட்களில் நன்கு வளர்ந்து விடும். ஒரு ஏக்கருக்கு, 10 கிலோ விதைகள் போதுமானது. தண்ணீரும் குறைவாகவே தேவைப்படும்.

இச்செடிகளின் வேர் முடிச்சுகளில், 80 சதவீதமும், இலைகளில், 30 சதவீதமும் தழைச்சத்து உள்ளது. நன்கு வளர்ந்த செடிகளை மடக்கி உழுதுவிட வேண்டும். பின் இந்நிலத்தில் பயிரிடப்படும் எந்த பயிருக்கும் ரசாயன உரத்தின் தேவை இருக்காது' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us