Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோவை கலெக்டர் ஆபீசுக்கு 5வது முறை வெடிகுண்டு மிரட்டல்

கோவை கலெக்டர் ஆபீசுக்கு 5வது முறை வெடிகுண்டு மிரட்டல்

கோவை கலெக்டர் ஆபீசுக்கு 5வது முறை வெடிகுண்டு மிரட்டல்

கோவை கலெக்டர் ஆபீசுக்கு 5வது முறை வெடிகுண்டு மிரட்டல்

ADDED : செப் 05, 2025 10:37 PM


Google News
கோவை; கோவை கலெக்டர் அலுவலகத்துக்குள், வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக, 26ம் தேதி, இ-மெயில் வாயிலாக மிரட்டல் வந்தது. வெடிகுண்டு நிபுணர்கள், போலீஸ் மோப்ப நாய் மூலம் சோதனை நடத்தியபோது, புரளி என்பது தெரியவந்தது.

அதன்பின் தொடர்ச்சியாக, மூன்று நாட்கள் அதேபோல் இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. கோவை மாநகர இணையவழி குற்றப்பிரிவு (சைபர் கிரைம்)போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

அரசு விடுமுறை தினமான நேற்றுகலெக்டர் ஆபீஸ் இ-மெயிலுக்கு, அதிகாலை 5.26 மணிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்தது.

விடுமுறை என்பதால் தாமதமாக, மதியத்துக்கு பின் இ-மெயிலை சரிபார்த்தபோது குண்டு மிரட்டல் வந்தது தெரியவந்தது. மோப்ப நாய் மலர் மற்றும் வெடிகுண்டு செயல் இழப்பு நிபுணர்கள் சோதனையிட்டனர்.

வெடிகுண்டு இல்லை. தொடர்ச்சியாக மிரட்டல் விடுக்கும் மர்ம நபர்களை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us