Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/களவு போன ரூ.20.39 கோடி பொருட்கள் கண்டுபிடிப்பு; மேற்கு மண்டல ஐ.ஜி., பெருமிதம்

களவு போன ரூ.20.39 கோடி பொருட்கள் கண்டுபிடிப்பு; மேற்கு மண்டல ஐ.ஜி., பெருமிதம்

களவு போன ரூ.20.39 கோடி பொருட்கள் கண்டுபிடிப்பு; மேற்கு மண்டல ஐ.ஜி., பெருமிதம்

களவு போன ரூ.20.39 கோடி பொருட்கள் கண்டுபிடிப்பு; மேற்கு மண்டல ஐ.ஜி., பெருமிதம்

ADDED : ஜன 05, 2024 12:13 AM


Google News
-நமது நிருபர்-

''ஆதாய கொலை மற்றும் திருட்டு வழக்குகள் 2022ம் ஆண்டில், 2,762 வழக்குகள் பதிவாகியிருந்தது. கடந்த ஆண்டில், 2,441 வழக்குகளே பதிவு செய்யப்பட்டுள்ளன,'' என்று மேற்கு மண்டல ஐ.ஜி., பவானீஸ்வரி தெரிவித்தார்.

நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

l களவு போன சொத்துகளில், 81 சதவீதம் கண்டு பிடிக்கப்பட்டு, அதில் 69 சதவீதம் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. அதாவது, களவு போன ரூ.29,45,02,145 மதிப்புள்ள பொருட்களில் ரூ.20,39,42,707 மதிப்பிலான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

l கொலை, கொலை முயற்சி, கலகம் மற்றும் அடி,தடி வழக்குகள், 2022-ம் ஆண்டு, 5,128 இருந்தது. கடந்தாண்டில், 4,303 ஆக குறைந்துள்ளது. இது, 2022ம் ஆண்டை விட, 825 வழக்குகள் குறைவாகும்.

l போக்சோ வழக்குகள் , 2022ம் ஆண்டை காட்டிலும் கடந்தாண்டில், 226 வழக்குகள் குறைந்து உள்ளன. கடந்தாண்டில், 131 போக்சோ வழக்குகளில் குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தால் தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது.

l 2022ம் ஆண்டை காட்டிலும் வாகன விபத்து இறப்பு வழக்குகள் கடந்தாண்டில், 131 குறைந்துள்ளன. வாகன விபத்து மரணங்களும், 2022ம் ஆண்டை விட கடந்தாண்டு, 110 குறைந்துள்ளது. சிறு காய வழக்குகள் அதிகரித்த போதும், கொடுங்காய வழக்குகள் குறைத்துள்ளன.

l 2022ம் ஆண்டு, 4,324 விபத்து இறப்புகளும், கடந்தாண்டில், 4,214 இறப்புகளும் பதிவாகி உள்ளது. நீதிமன்றத்தால், 2022ம் ஆண்டு, 65 கொலை வழக்குகள் தண்டனையில் முடிந்தன. கடந்தாண்டில், 73 கொலை வழக்குகள் தண்டனையில் முடிந்துள்ளன.

l 2022ம் ஆண்டு, 4 ஆதாய கொலை வழக்குகள் தண்டனையில் முடிந்தன. கடந்தாண்டு, 5 ஆதாய கொலை வழக்குகள் தண்டனையில் முடிந்துள்ளன.

l 2022-ம் ஆண்டு, 44 வழிப்பறி கொள்ளை வழக்குகள் தண்டனையில் முடிந்துள்ளன. கடந்தாண்டு, 74 வழக்குகள் தண்டனையில் முடிந்துள்ளன. எட்டு கற்பழிப்பு வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது.

l குட்கா வழக்குகள் 2022ம் ஆண்டில், 3,752ம், கடந்தாண்டில், 6,773 வழக்கும் பதியப்பட்டுள்ளது. கஞ்சா மற்றும் போதை பொருட்கள் வழக்குகள் 2022ம் ஆண்டு, 1816 வழக்கும், கடந்தாண்டில், 1799 வழக்கும் பதியப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

'1,175 வீடுகளில் தனிமை!'

கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் 1,175 தனிமையில் வசித்து வரும் வீடுகள், 2,150 பண்ணை வீடுகள், 2,250 முதியவர்கள் வசித்து வரும் வீடுகள் என மொத்தம், 5,578 வீடுகள் கண்டறியப்பட்டு உள்ளன.அவர்களின் இருப்பிடங்களுக்கு, பீட் போலீசார் சென்று கண்காணித்து வருகின்றனர். அவர்களை பாதுகாக்க போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று வருவது, 'ஸ்மார்ட் காவலன் ஆப்' மூலம் உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது.தனிமையில் வசித்து வருபவர்களின் வீடுகளில் கடந்த, 3 மாதங்களில், 3000க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேற்கு மண்டலத்தில், 55,000 கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.இதை தவிர, கிராமங்களில் குற்றசம்பவங்களை தடுக்க, 'வில்லேஜ் விஜிலென்ஸ் கமிட்டி' அமைக்கப்பட்டுள்ளது. அதில் கோவை சரகத்தில், 3022 குழுக்களும், சேலம் சரகத்தில், 1,264 குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.



இறப்பு இல்லை'

''பிராஜெக்ட் பள்ளிக்கூடம், காவலன் செயலி, மற்றும் பிற விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலமாகவும், பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும் பொதுமக்களிடம் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வினாலும் நடப்பாண்டில் வரதட்சணை இறப்பு குற்றங்கள் இல்லாத ஆண்டாக மாறியுள்ளது,'' என்றார் ஐ.ஜி.,பவானீஸ்வரி.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us