Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பைக் மோதி 2 பெண்கள் பலி

பைக் மோதி 2 பெண்கள் பலி

பைக் மோதி 2 பெண்கள் பலி

பைக் மோதி 2 பெண்கள் பலி

ADDED : செப் 05, 2025 10:11 PM


Google News
கோவை:

இரு வேறு சம்பவங்களில், பைக் மோதியதில், ரோட்டில் நடந்து சென்ற இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கோவை, வெள்ளலுார் ரோடு, சாமண்ணா நகரை சேர்ந்தவர் அன்னபாக்யம்,40; நேற்று முன்தினம் போத்தனுார், வெள்ளலுார் ரோடு, சி.எஸ்.ஐ., சர்ச் அருகில் நடந்து சென்றார். அவ்வழியாக வந்த மொபட் மோதியதில் படுகாயம் அடைந்தார்.

தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர். இதேபோல், மாச்சம்பாளையம், வி.ஆர்.தோட்டத்தில் வசிப்பவர் வீராசாமி. இவரது மனைவி லலிதா,49, மேட்டுப்பாளையம் ரோட்டில், கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி சாலையை கடக்க முயன்றபோது, அவ்வழியாக வேகமாக வந்த பைக் மோதி படுகாயம் அடைந்தார் .

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். போக்குவரத்து போலீசார் விசாரித்து, பைக் ஓட்டி வந்த மனோஜ்குமார்,20,மீது வழக்கு பதிந்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us