Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ டி.என்.பி.எஸ்.சி., தேர்வு; 1,416 பேர் பங்கேற்பு

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு; 1,416 பேர் பங்கேற்பு

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு; 1,416 பேர் பங்கேற்பு

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு; 1,416 பேர் பங்கேற்பு

ADDED : ஜூன் 15, 2025 09:50 PM


Google News
Latest Tamil News
பொள்ளாச்சி; பொள்ளாச்சியில் நடந்த டி.என்.பி.எஸ்.சி., தேர்வை, 1,416 பேர் எழுதிய நிலையில், 494 பேர் 'ஆப்சென்ட்' ஆகி இருந்தனர்.

டி.எஸ்.பி.எஸ்.சி., குரூப் 1, 1ஏ தேர்வு, பொள்ளாாச்சியில், ஏழு மையங்களில், நேற்று நடந்தது. இதற்காக, மொத்தம், 1,910 பேர், தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதன்படி, அந்தந்த மையங்களில், நேற்று காலை, 9:30 மணிக்கு துவங்கியது.

தேர்வர்கள், காலை, 8:30 மணிக்கே அந்தந்த மையங்களுக்கு சென்றனர். அதன்படி, 12:30 மணி வரை தேர்வு நடந்தது. இந்த தேர்வை, 1,416 பேர் தேர்வு எழுதினர். 494 பேர் தேர்வு எழுதவில்லை.

வருவாய் அதிகாரிகள் கூறுகையில், 'டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்காக, பள்ளி, கல்லுாரி என, 7 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. உரிய நேரத்துக்குள் வந்த தேர்வர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். தாமதமாக தேர்வு எழுத வந்த தேர்வர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். அதேபோல, முறைகேடுகளைக் கண்டறிந்து தடுக்க, கண்காணிப்பு அலுவலர்கள், வீடியோகிராபர்கள் உள்ளிட்டோர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us