Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஆயுர்வேத மசாஜ் சென்டரில் 10 பேர் கைது

ஆயுர்வேத மசாஜ் சென்டரில் 10 பேர் கைது

ஆயுர்வேத மசாஜ் சென்டரில் 10 பேர் கைது

ஆயுர்வேத மசாஜ் சென்டரில் 10 பேர் கைது

ADDED : ஜூன் 09, 2025 05:31 AM


Google News
Latest Tamil News
கோவில்பாளையம், : பாலியல் தொழிலில் எட்டு பெண்களை ஈடு படுத்திய இருவர் கைது செய்யப்பட்டனர். மசாஜ் சென்டர் நடத்திய ஐ.டி., நிறுவன ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரையை சேர்ந்த ராகேஷ் சர்மா, 36. கீரணநத்தம் பகுதியில் ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர் கீரணத்தத்தில் கோல்டன் ஆயுர்வேத மசாஜ் சென்டர் என்னும் மையத்தை இரு வாரங்களுக்கு முன் துவக்கியுள்ளார்.

அங்கு பாலியல் தொழில் நடப்பதாக வந்த புகாரையடுத்து கோவில் பாளையம் இன்ஸ்பெக்டர் இளங்கோ, தலைமையில் எஸ்.ஐ.,கள் இளங்கோ, ராஜு உள்ளிட்டோர் அங்கு சோதனை நடத்தினர்.

அங்கு எட்டு பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கவுண்டம்பாளையம், ஸ்ரீராம், 30. என்பவரும் சங்ககிரி முருகானந்தம், 20. என்பவரும், எட்டு பெண்களும் கைது செய்யப்பட்டனர். அங்கிருந்து ஒரு மொபைல், ஒரு மோட்டார் பைக் பறிமுதல் செய்யப்பட்டது. மசாஜ் சென்டர் நடத்தி வந்து ஐ.டி., ஊழியர் ராகேஷ் சர்மாவை போலீசார் தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us