Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தொண்டாமுத்தூர் அரசு கல்லூரியில் சேர இப்போதும் விண்ணப்பிக்கலாம்

தொண்டாமுத்தூர் அரசு கல்லூரியில் சேர இப்போதும் விண்ணப்பிக்கலாம்

தொண்டாமுத்தூர் அரசு கல்லூரியில் சேர இப்போதும் விண்ணப்பிக்கலாம்

தொண்டாமுத்தூர் அரசு கல்லூரியில் சேர இப்போதும் விண்ணப்பிக்கலாம்

ADDED : ஜூலை 02, 2024 11:23 PM


Google News
தொண்டாமுத்தூர்;தொண்டாமுத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு இன்று துவங்க உள்ள நிலையில், மாணவர் சேர்க்கைக்கு, இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள், தற்போது விண்ணப்பிக்கலாம் என, கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொண்டாமுத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில், பி.பி.ஏ., பி.காம்., (சி.ஏ.,), பி.காம்., (பி.ஏ.,),

பி.ஏ., (பொருளாதாரம்), பி.ஏ., (ஆங்கிலம்), பி.எஸ்.சி., கணிதம் ஆகிய ஆறு பாடப்பிரிவுகள் உள்ளது.

இந்தாண்டு, மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டது. இரண்டு கட்டங்களாக கலந்தாய்வு நடந்தது. இதில், மொத்தமுள்ள 378, இடங்களில், 250 இடங்கள் நிரப்பப்பட்டன.

இந்நிலையில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு, இன்று முதல் துவங்க உள்ளது. இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள், தற்போது விண்ணப்பிக்கலாம் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, மேற்குற்பட்ட பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு, இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள், வரும் 5ம் தேதி வரை, tngasa.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தொடர்ந்து, ஜூலை 8ம் தேதி முதல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறும் என, கல்லூரி முதல்வர் சக்தி ஸ்ரீ தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us