ADDED : ஜூன் 05, 2024 09:42 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, ரயிலில் அடிபட்டு இறந்தவர் குறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோவை - பொள்ளாச்சி பயணியர் ரயில், நேற்றுமுன்தினம் இரவு பொள்ளாச்சி வந்தது. அப்போது, இரவு, 8:00 மணிக்கு வடக்கிப்பாளையம் பிரிவு மேம்பாலம் அருகே, ரயிலில் அடிபட்டு, ஒருவர் இறந்து கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், ரயில் அடிபட்டு இறந்து கிடந்த, 55 வயது மதிக்கத்தக்கவரின் உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அந்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.