/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ புரோக்கர்கள் சொன்னால் நடக்குது... நாங்கள் சொன்னால் நடப்பதில்லை! கவுன்சில் கூட்டத்தில் கவுன்சிலர்கள் குமுறல் புரோக்கர்கள் சொன்னால் நடக்குது... நாங்கள் சொன்னால் நடப்பதில்லை! கவுன்சில் கூட்டத்தில் கவுன்சிலர்கள் குமுறல்
புரோக்கர்கள் சொன்னால் நடக்குது... நாங்கள் சொன்னால் நடப்பதில்லை! கவுன்சில் கூட்டத்தில் கவுன்சிலர்கள் குமுறல்
புரோக்கர்கள் சொன்னால் நடக்குது... நாங்கள் சொன்னால் நடப்பதில்லை! கவுன்சில் கூட்டத்தில் கவுன்சிலர்கள் குமுறல்
புரோக்கர்கள் சொன்னால் நடக்குது... நாங்கள் சொன்னால் நடப்பதில்லை! கவுன்சில் கூட்டத்தில் கவுன்சிலர்கள் குமுறல்
'வடிகால்கள் துார்வாருவதில்லை'
கவுன்சிலர் கற்பகம் (தி.மு.க.,) பேசுகையில், ''வார்டில் தெருவிளக்குகள் பிரச்னை பெரியளவில் உள்ளது. பலமுறை புகார் அளித்தும், பிரச்னை தீரவில்லை. வயர்களை முறையாக மாற்ற வேண்டும். வார்டில் என்ன பணி நடக்கிறது என்பது, கவுன்சிலர்களுக்கு தெரிவதில்லை.
'குப்பை அள்ளப்படுவதில்லை'
கவுன்சிலர் ராமமூர்த்தி (மா.கம்யூ.,) பேசுகையில், ''குப்பை முறையாக அள்ளப்படுவதில்லை. சுகாதார துறை அலுவலர்களை தொடர்பு கொண்டால், மொபைல்போனை எடுப்பதில்லை. கவுன்சிலர்களுக்கு மரியாதையே இல்லை.
'சாக்கடைகள் அடைப்பு'
கவுன்சிலர் சித்ரா (திமு.க.,) பேசுகையில், ''கோவை மாநகராட்சி ஆணையாளர், நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு ஒரு முறை, குடிநீர் வரும் என்று சொல்கிறார். ஆனால் 10 நாட்களுக்கு ஒரு முறை தான் வருகிறது. ஆகவே, ஆணையாளர் குறிப்பிட்ட நான்கு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.தெருக்களில் சாக்கடைகள் அடைத்துள்ளன. சாக்கடையை சுத்தம் செய்ய வேண்டும்.