/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பிரதமர் மோடியிடம் எதிர்பார்ப்பது என்னென்ன? கோவை தொழில் துறையினர் பட்டியல் பிரதமர் மோடியிடம் எதிர்பார்ப்பது என்னென்ன? கோவை தொழில் துறையினர் பட்டியல்
பிரதமர் மோடியிடம் எதிர்பார்ப்பது என்னென்ன? கோவை தொழில் துறையினர் பட்டியல்
பிரதமர் மோடியிடம் எதிர்பார்ப்பது என்னென்ன? கோவை தொழில் துறையினர் பட்டியல்
பிரதமர் மோடியிடம் எதிர்பார்ப்பது என்னென்ன? கோவை தொழில் துறையினர் பட்டியல்

எங்கள் தேவைகளை கேளுங்கள்
மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு மாநில தலைவர் ஜெயபால் கூறியதாவது:
கடன் அட்டை வழங்கணும்
கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில்கள் மற்றும் ஊரகத் தொழில்முனைவோர் சங்க (காட்மா) தலைவர் சிவக்குமார்: ஜாப் நிறுவனங்களுக்கான 12 சதவீத ஜி.எஸ்.டி.,யை, 5 சதவீதமாக குறைக்க வேண்டும். கோவையில் உள்ள 'செயில் யார்டு' ஐந்தாண்டுகளாக மூடிக்கிடக்கிறது. அதை மீண்டும் திறந்து, மொத்தமாகவும், சில்லறையாகவும் சரியான, நியாயமான விலைக்கு மூலப்பொருட்கள் கிடைக்கச் செய்ய வேண்டும்.
அவகாசம் அவசியம்
தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்க (சீமா) தலைவர் விக்னேஷ்: பம்ப் உற்பத்தியில், பி.இ.இ., மற்றும் பி.ஐ.எஸ்., தரக்குறியீடு பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதற்கான நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும். இரு தரச்சான்றுகளும் பெறுவது வெவ்வேறு துறையாக இருக்கிறது; எளிமைப்படுத்துவதற்கான பணி மேற்கொள்ள வேண்டும்.
வரிச்சலுகை கொடுங்க!
கோவை மாவட்ட கிரில் தயாரிப்பாளர்கள் நலச்சங்க (கோஜிமா) தலைவர் ரவி: 18 சதவீதமாக உள்ள ஜி.எஸ்.டி.,யை, 5 சதவீதமாக குறைக்க வேண்டும். கிரில் பேப்ரிகேஷன் தொழில் செய்வோருக்கு, 500 யூனிட் மின்சாரம் இலவசமாக தர வேண்டும். பிரத்யேகமாக தொழில்பேட்டை உருவாக்க வேண்டும். புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, வேலைவாய்ப்பு அளிக்கிறோம் என்பதால், வரிச்சலுகை, மின் கட்டண சலுகை அளிக்க வேண்டும். வங்கி கடன் வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.