/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தமிழக பட்ஜெட்: கோவை தொழில்துறையின் எதிர்பார்ப்புகள் என்னென்ன?தமிழக பட்ஜெட்: கோவை தொழில்துறையின் எதிர்பார்ப்புகள் என்னென்ன?
தமிழக பட்ஜெட்: கோவை தொழில்துறையின் எதிர்பார்ப்புகள் என்னென்ன?
தமிழக பட்ஜெட்: கோவை தொழில்துறையின் எதிர்பார்ப்புகள் என்னென்ன?
தமிழக பட்ஜெட்: கோவை தொழில்துறையின் எதிர்பார்ப்புகள் என்னென்ன?

பெரும் தொழிற்பேட்டை அவசியம் மேற்கூரை சோலாருக்கு 25 சதவீத மானியம் மின் கட்டணம் தான் மிகப் பெரும் பிரச்னை
ஆயத்த ஆடைத்துறைக்கு சலுகை
குறுந்தொழில் பேட்டைகள் தேவை
கோவையில் தொழில்நுட்ப உதவி மையம் அமைக்க வேண்டும். அரசூரில், அரசு கோழிப்பண்ணை இடத்தை தமிழக அரசு, மத்திய அரசுக்கு வழங்கியது. அங்கு தொழில்நுட்ப மையம் அமைக்க ஆயத்தம் நடந்தது. அப்பணிகள் கிடப்பில் உள்ளன. மீண்டும் துவங்க வேண்டும்.
'பீக் ஹவர்' கட்டணம் வேண்டாமே
மேற்கூரை சோலாருக்கு மின்வாரியம் கையாளும் கட்டணம் வசூலிக்கக்கூடாது. நிலைக்கட்டணம், பீக் ஹவர் கட்டணங்களைத் திரும்பப் பெற வேண்டும்.
இலவச பரிசோதனைக் கூடம் முதலீட்டு மானியம் விரைவுபடுத்தணும்
குறுந்தொழில்பேட்டை அமைக்க வேண்டும். மாவட்ட தொழில்மையத்தின் வாயிலாக வழங்கப்படும் முதலீட்டு மானியம் பெற 2 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. ஆறு மாதங்களுக்குள் கிடைக்கும் வகையில் நிதி ஒதுக்க வேண்டும். மின் கட்டண உயர்வை அரசு திரும்பப் பெற வேண்டும். ரிங் ரோடு உட்பட கோவையின் உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்.
குறுந்தொழில் வாரியம் அமைக்கணும்
சுருளிவேல், துணைத்தலைவர், டான்ஸ்டியா: மாவட்டம்தோறும் குறுந்தொழில் பேட்டைகள் அமைத்திட வேண்டும். சோலார் மின் உற்பத்தியை அதிகரிக்க மானியத்தை அதிகரிக்க வேண்டும். கோவைக்கான புதிய மாஸ்டர் பிளானை உடனே அமல்படுத்த வேண்டும். கோவையில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தி, பெரிய தொழில்களை கோவைக்கு கொண்டு வர வேண்டும். குறு, சிறு தொழில்களுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும்.
கோரிக்கை விடுத்து களைத்துவிட்டோம்
திருமலை ரவி, தலைவர், கோஜிம்வா: 15 ஆண்டுகளாக கோரிக்கை வைத்துக் களைத்துவிட்டோம். எந்த அரசும் கண்டுகொள்வதாக இல்லை. 7 லட்சத்துக்கும் அதிகமானோர் கிரில் தொழிலில் ஈடுபட்டு உள்ளனர். கோவையில் கிரில் தொழிலுக்கென, தனி தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக முதல்வரே அறிக்கை வெளியிட்டார். இதுவரை நடவடிக்கை இல்லை. இக்கோரிக்கைகளை, இந்த பட்ஜெட்டிலாவது அரசு நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு, தொழில் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.