/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஜெ.சி.டி., கல்லுாரியில் மாணவர்களுக்கு வரவேற்பு ஜெ.சி.டி., கல்லுாரியில் மாணவர்களுக்கு வரவேற்பு
ஜெ.சி.டி., கல்லுாரியில் மாணவர்களுக்கு வரவேற்பு
ஜெ.சி.டி., கல்லுாரியில் மாணவர்களுக்கு வரவேற்பு
ஜெ.சி.டி., கல்லுாரியில் மாணவர்களுக்கு வரவேற்பு
ADDED : ஜூலை 18, 2024 12:12 AM

கோவை : ஜெ.சி.டி., கலை அறிவியல் கல்லுாரியின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, வரவேற்பு விழா கல்லுாரி கலையரங்கத்தில் நடந்தது. ஜெ.சி.டி., கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் மற்றும் செயலாளர் துர்கா, விழாவிற்கு தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட, பாரதியார் பல்கலையின் துணைவேந்தர் குழு உறுப்பினர் லவ்லினா லிட்டில் பிளவர் மற்றும் கோவை மண்டல, கல்லுாரி கல்வி இணை இயக்குனர் கலைச்செல்வி ஆகியோர், மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் உரையாற்றினர்.
ஜெ.சி.டி., கலை கல்லுாரி முதல்வர் காமேஷ், ஜெ.சி.டி., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியின் முதல்வர் மனோகரன், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.