ADDED : ஜூலை 24, 2024 11:48 PM
கோவை : கோவை டாடாபாத்தில், அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில், நிறைவேற்றப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்களை, மத்திய அரசு திரும்ப பெற வேண்டும், 44 தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தியதை திரும்பப் பெற வேண்டும், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும் என, கோஷங்கள் எழுப்பப்பட்டன. பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.