Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணியர் குளிக்க தடை

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணியர் குளிக்க தடை

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணியர் குளிக்க தடை

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணியர் குளிக்க தடை

ADDED : ஜூலை 10, 2024 11:44 PM


Google News
Latest Tamil News
வால்பாறை:கோவை மாவட்டம், வால்பாறை மலைப்பகுதி, தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ளது. வால்பாறை வரும் சுற்றுலா பயணியர், கேரள மாநிலம் சாலக்குடி செல்லும் வழியில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கும் செல்கின்றனர்.

இந்நிலையில், கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தொடர்ந்து பெய்வதால், அங்குள்ள நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்தும் அதிகரித்துள்ளது. இதனால் அதிரப்பள்ளி, சார்பா உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளில் சுற்றுலா பயணியர் குளிக்க வனத்துறையினர் தற்காலிகமாக தடை விதித்துள்ளனர்.

கேரள வனத்துறையினர் கூறுகையில், 'தமிழக - கேரள எல்லையில் உள்ள மளுக்கப்பாறை, அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பகுதிகளில், கனமழை பெய்து வருவதால், நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், இங்குள்ள நீர்வீழ்ச்சிகளில் சுற்றுலா பயணியர் குளிக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா வருவோர், அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியை கண்டு களிக்கலாம்' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us