Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வரத்து அதிகரிப்பால் விலை சரிந்த தக்காளி

வரத்து அதிகரிப்பால் விலை சரிந்த தக்காளி

வரத்து அதிகரிப்பால் விலை சரிந்த தக்காளி

வரத்து அதிகரிப்பால் விலை சரிந்த தக்காளி

ADDED : ஜூலை 30, 2024 10:53 PM


Google News
தொண்டாமுத்தூர்:தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் வரத்து அதிகரித்துள்ளதால், தக்காளி விலை குறைந்துள்ளது.

தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், 25,555 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இங்கு, சின்னவெங்காயம், தக்காளி, மஞ்சள், வாழை, தென்னை உள்ளிட்டவைகள் முக்கிய பயிராக பயிரிடப்படுகிறது. இப்பகுதி விவசாயிகள், தங்களின் விளை பொருட்களை தொண்டாமுத்தூர் மற்றும் பூலுவபட்டியில் உள்ள தினசரி காய்கறி மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகின்றனர். மழை மற்றும் வரத்து குறைவு காரணமாக, இம்மாத துவக்கம் முதலே தக்காளி, விலை உயர்ந்து காணப்பட்டது. இந்நிலையில், தொடர் மழை பெய்து வந்தாலும், தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால், விலை சரிவடைந்து வருகிறது. பூலுவபட்டி தினசரி காய்கறி மார்க்கெட்டில், கடந்த வாரம், 14 கிலோ எடையுள்ள ஒரு டிப்பர் தக்காளி, 600 ரூபாய்க்கு விற்பனையாகியது. வரத்து அதிகரித்ததால், நேற்று, 14 கிலோ எடையுள்ள ஒரு டிப்பர் தக்காளி, 300 ரூபாய்க்கு விற்பனையானது. வெளியூர் தக்காளி, வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், தக்காளி விலை மேலும் சரிவடையும் என, வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us