Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தக்காளி ஊறுகாய்

தக்காளி ஊறுகாய்

தக்காளி ஊறுகாய்

தக்காளி ஊறுகாய்

ADDED : ஜூன் 15, 2024 11:15 PM


Google News
Latest Tamil News
தேவையான பொருட்கள்:தக்காளி - ஒரு கிலோபுளி - எலுமிச்சை அளவுகடுகு - ஒன்றரை டீஸ்பூன்வெந்தயம் - ஒன்றரை டீஸ்பூன்பூண்டு - 20 பல்காய்ந்த மிளகாய் - மூன்றுமஞ்சள்துாள் - கால் டீஸ்பூன்மிளகாய்துாள் - இரண்டு டேபிள் ஸ்பூன்எண்ணெய் - ஏழு டேபிள் ஸ்பூன்பெருங்காயத் துாள் - கால் டீஸ்பூன்கறிவேப்பிலை, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: முதலில் புளியை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஊறவைத்து கரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.பின்னர் ஒரு கடாயில் நறுக்கிய தக்காளியை சேர்த்து மூடி வைத்து, பத்து நிமிடங்களுக்கு வேகவிடவும்.

தக்காளி மென்மையாக வெந்து, ஓரளவிற்கு அதன் சாறு வற்றியவுடன் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை ஊற்றி சமைக்கவும்.இவற்றில் உள்ள தண்ணீர் எல்லாம் வற்றி ஓரளவிற்கு தொக்கு பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைத்துக் கொள்ளவும்.

அடுத்து வாணலி ஒன்றை அடுப்பில் வைத்து குறைந்த தீயில் கடுகு மற்றும் வெந்தயத்தை தனித்தனியாக போட்டு வறுத்து எடுத்து கொள்ளுங்கள்.

இவை ஆறியவுடன், ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக பொடியாக அரைத்து கொள்ளவும். பின்னர் கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து, ஆறு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு மற்றும் வெந்தயம் சேர்த்து கொள்ளுங்கள்.

கடுகு பொரிந்ததும் பூண்டு, சிகப்பு காய்ந்த மிளகாய் மற்றும் ஒரு கைப்பிடி கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு கலந்து அடுப்பை அணைத்து விடவும்.

இதனுடன் மஞ்சள் துாள், மிளகாய் துாள் மற்றும் பெருங்காய துாள் சேர்த்து நன்றாக கலந்துவிட்டு கொள்ளவும். பிறகு நாம் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள கடுகு மற்றும் வெந்தய பொடியை சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

அடுத்து அதில் செய்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து அதனுடன் தேவைக்கேற்ப உப்பு போட்டு கலந்துவிட்டு அடுப்பை ஆன் செய்யவும்.பின்னர் அதில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்றாக கலந்துவிட்டு மூன்று நிமிடங்களுக்கு வேகவிடவும். அனைத்தும் நன்றாக வெந்து எண்ணெய் மிதந்துவரும் பொழுது அடுப்பை அணைத்தால், ருசியான தக்காளி ஊறுகாய் ரெடி.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us