/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வாகனங்கள் செல்ல தகுதி இல்லாத ரோடு வாகனங்கள் செல்ல தகுதி இல்லாத ரோடு
வாகனங்கள் செல்ல தகுதி இல்லாத ரோடு
வாகனங்கள் செல்ல தகுதி இல்லாத ரோடு
வாகனங்கள் செல்ல தகுதி இல்லாத ரோடு
ADDED : ஜூன் 06, 2024 11:27 PM

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, அரசம்பாளையம் - கொண்டம்பட்டி செல்லும் ரோடு வாகனங்கள் செல்ல தகுதி இல்லாத ரோடாக உள்ளது.
கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு உட்பட்ட, அரசம்பாளையம் - கொண்டம்பட்டி செல்லும் ரோடு மூன்று கிலோ மீட்டர் தொலைவு உள்ளது. இந்த வழித்தடத்தில், சில தனியார் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
இந்நிலையில், ரோடு முழுவதும் சேதமடைந்து உள்ளது. ஒரு சில இடங்களில் மேடு பள்ளமாகவும், சில இடங்களில் கற்களாகவும், மண் குவிந்து உள்ளது. இதனால், வாகன ஓட்டுநர்கள் செல்ல சிரமம் ஏற்படுகிறது.
மேலும், இந்த ரோட்டில் கனரக வாகனங்கள் அதிகம் செல்வதால் சேதமடைந்த ரோடு மேலும், உருக்குலைந்து வருகிறது. இதனால் இந்த ரோட்டில் வாகனங்களில் பயணிக்க சாகசம் செய்ய வேண்டியுள்ளது. கவனம் சிதறினால், தடுமாறி விழுந்து விபத்துக்கு உள்ளாகின்றனர்.
இந்த ரோட்டில் இரவு நேர பயணத்தை தவிர்த்து மாற்று வழியில், பைக் ஓட்டுநர்கள் சென்று வருகின்றனர். மொத்தத்தில் இந்த ரோடு வாகனங்கள் செல்ல தகுதி இல்லாததாக உள்ளதாக வாகன ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர்.
நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், 'அரசம்பாளையம் - கொண்டம்பட்டி ரோட்டில், 'பைப்பாஸ்' ரோடு அமைக்க நெடுஞ்சாலைத்துறையில் உள்ள பிரிவால் முடிவு செய்யப்பட்டது. ஆனால், இந்த திட்டம் கை விடப்பட்டது. மேலும், ரோட்டை அந்த பிரிவில் இருந்து மாற்றம் செய்யப்பட்டவுடன், விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.