/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நீதிபதி சந்துருவின் அறிக்கையை ஏற்க கூடாது ஹிந்து மக்கள் கட்சி வலியுறுத்தல் நீதிபதி சந்துருவின் அறிக்கையை ஏற்க கூடாது ஹிந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்
நீதிபதி சந்துருவின் அறிக்கையை ஏற்க கூடாது ஹிந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்
நீதிபதி சந்துருவின் அறிக்கையை ஏற்க கூடாது ஹிந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்
நீதிபதி சந்துருவின் அறிக்கையை ஏற்க கூடாது ஹிந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்
ADDED : ஜூன் 25, 2024 08:49 PM
பொள்ளாச்சி:நீதிபதி சந்துரு விசாரணை குழு அளித்துள்ள அறிக்கையை தமிழக அரசும், பள்ளிக் கல்வித்துறையும் ஏற்கக் கூடாது என, ஹிந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
ஹிந்து மக்கள் கட்சி கோவை தெற்கு மாவட்ட அமைப்புச் செயலாளர் கார்த்திபன், ஆனைமலை தாசில்தாரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
பள்ளி கல்லுாரிகளில், ஜாதி அடையாளங்களை களைவதாக கூறி, தமிழக அரசு, நீதிபதி சந்துரு தலைமையில் தனி நபர் விசாரணை குழு அமைத்தது. அக்குழுவின் அறிக்கை முதல்வரிடம் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கை, ஹிந்து சமய நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் உள்ளது. குறிப்பாக, ஹிந்து சமய நம்பிக்கை அடையாளமான காப்பு, கயிறு கட்டுதல், திலகம் இடுதல், பூ வைத்தல் போன்றவைகளுக்கு தடை செய்ய வேண்டும் என, உள்ளது.
ஜாதிக்கென்று, தனிபட்ட அடையாளப்படுத்தக் கூடிய கயிறுகள் இல்லை. கடவுள் மீது நம்பிக்கை கொண்ட ஹிந்து சமூகத்தை சேர்ந்தவர்கள், ஆலயங்களில் வழிபாடு நடத்தி, கயிறுகள் கட்டுவது வழக்கம். ஹிந்துக்கள் திருநீர், குங்குமம், சந்தனம், இட்டுக் கொள்வது சமய நம்பிக்கை சார்ந்தது. பெண்கள் பூ வைத்துக் கொள்வது என்பது வாழ்வியல் நடைமுறை. இது, அறிவியல் பூர்வமாக பல்வேறு நன்மைகளை அளிக்கக் கூடியது.
நீதிபதியின் அறிக்கை மறைமுகமாக மதமாற்றத்தை ஊக்குவிப்பதாக உள்ளது. மாற்று மதத்தைச் சார்ந்தவர்கள் தங்களின் மத அடையாளமான சிலுவை, ஹிஜாப் போன்றவைகள் குறித்து அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
ஹிந்து சமுதாயத்தின் அடையாளங்களை மட்டும் நீக்க வலியுறுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது. பெரும்பான்மை, சிறுபான்மை, என ஜாதி ரீதியாக பிரிக்கின்ற பணியை தனிநபர் விசாரணை குழு செய்துள்ளது.
இதேபோல, பள்ளிக்கல்வித் துறை பாடநுால் கழகம் சார்பில் நடப்பாண்டு வெளியிடப்பட்டுள்ள மூன்றாம் வகுப்பு தமிழ் பாடத்தில், அனைவரும் கைகோர்த்து சம ரீதியாக நிற்பது போன்ற போட்டோவில், இஸ்லாமிய மத அடிப்படை அடையாள சின்னங்கள் மட்டும் இடம்பெற்றுள்ளது. மீதமுள்ள குழந்தைகளின் சமய அடையாள சின்னங்கள் நீக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.
எனவே, அப்பாடத் திட்டத்தில் இருந்து அப்பகுதியை நீக்க வேண்டும். நீதிபதி சந்துரு விசாரணை குழு அளித்துள்ள அறிக்கையை தமிழக அரசும், பள்ளிக் கல்வித்துறையும் ஏற்கக் கூடாது.
இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.