Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அரசு ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் 

அரசு ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் 

அரசு ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் 

அரசு ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் 

ADDED : ஜூலை 03, 2024 09:30 PM


Google News
Latest Tamil News
பொள்ளாச்சி : தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி, அரசு ஊழியர்கள் சங்கத்தினர், பொள்ளாச்சி தாசில்தார் அலுவலகம் முன், கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொள்ளாச்சி வட்டக்கிளை தலைவர் பத்மநாபன் தலைமை, செயலாளர் சின்னமாரிமுத்து முன்னிலை வகித்தார். சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகி சுப்ரமணியன், வருவாய்த்துறை ஊழியர் சங்க நிர்வாகி செந்தில், சாலை பணியாளர் சங்க நிர்வாகி சுந்தரம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

தேர்தல் கால வாக்குறுதிகளை தி.மு.க., அரசு நிறைவேற்ற வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். முடிவில், சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நிர்வாகி கிருஷ்ணவேணி நன்றி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us