Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 17வது நாளாக நிரம்பி ததும்பும் சோலையாறு

17வது நாளாக நிரம்பி ததும்பும் சோலையாறு

17வது நாளாக நிரம்பி ததும்பும் சோலையாறு

17வது நாளாக நிரம்பி ததும்பும் சோலையாறு

ADDED : ஆக 04, 2024 10:04 PM


Google News
Latest Tamil News
வால்பாறை : சோலையாறு அணை, 17வது நாளாக நிரம்பிய நிலையில் காட்சியளிப்பதால், பி.ஏ.பி., பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வால்பாறையில் தென்மேற்குப்பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளான மேல்நீராறு, கீழ்நீராறு, இரைச்சல்பாறை நீர்வீழ்ச்சி, கூழாங்கல் ஆறு உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்தும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், வால்பாறையில் பெய்த கனமழையால், பரம்பிக்குளம் பாசனத்திட்டத்தின் முக்கிய அணையான சோலையாறு அணை கடந்த மாதம், 19ம் தேதி நிரம்பியது. இதனைத்தொடர்ந்து சேடல் டேம் வழியாக, பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

வால்பாறையில், கடந்த மூன்று நாட்களாக மழைப்பொழிவு குறைந்த நிலையிலும், சோலையாறு அணை, 17வது நாளாக நிரம்பிய நிலையில் காட்சியளிப்பதால், பி.ஏ.பி., பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மழை நீடிக்கும் நிலையில்,சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 161.40 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு, 2,433 கனஅடி தண்ணீர் வரத்தாக உள்ளது.

அணையிலிருந்து வினாடிக்கு, 2,703 கனஅடி வீதம் தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு திறந்து விடப்படுகிறது. இதனால் இந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 66.85 அடியாக உயர்ந்தது.

வால்பாறையில் நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு (மி.மீ.,): வால்பாறை - 14, சோலையாறு - 15, பரம்பிக்குளம் - 47, மேல்நீராறு - 15, கீழ்நிராறு - 4, மேல்ஆழியாறு - 8.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us