ADDED : ஜூன் 21, 2024 12:28 AM

ஆனைமலை:ஆனைமலையில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தொழுநோய் கண்டறியும் பரிசோதனை முகாம் நடந்தது.
ஆனைமலையில், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான ஆதார வள மையத்தில், 20 குழந்தைகள் படிக்கின்றனர். இவர்களுக்கு ஆனைமலை வட்டார மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் செல்லத்துரை, தொழுநோய் பரிசோதனை மேற்கொண்டார்.
அதன்பின், தொழுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்களிடம் பேசினார். அதில், வள மைய பொறுப்பாளர் துண்டையன், செல்வராஜ் பங்கேற்றனர்.