கழிப்பிடத்திலும் 'காசு' பார்க்கறாங்க!
உடுமலை சந்தைக்கு போயிருந்தேன். சந்தைக்கு வந்திருந்த விவசாயி ஒருவர், 'கட்டண கழிப்பிடத்தில், கட்டண கொள்ளையடிக்கறாங்க, என்றார். அதுக்கு, இன்னொரு விவசாயி, 'கட்டண கொள்ளையில அதிகாரிகளுக்கும் பங்கிருக்குனு பேச ஆரம்பித்தார்.
இவங்கெல்லாம் திருந்தவே மாட்டாங்க!
வால்பாறை நகராட்சியில எந்த வேலையும் உருப்படியா நடக்கிறதில்ல என, பஸ் வருகைக்கு காத்திருந்த முதியவர்கள் பேசிக்கிட்டு இருந்தாங்க. என்ன விஷயம்னு தெரிஞ்சுக்க, அவங்க உரையாடலை காது கொடுத்து கேட்டேன்.
எலக் ஷன் ஹீரோக்கள் ஆக் ஷன்!
உடுமலை ஒன்றிய அலுவலகத்துல 'பைக்'ய நிறுத்திட்டு, செய்தி சேகரிக்க கிளம்பினேன். அங்க இருந்த ரெண்டு அதிகாரிகள், தேர்தல் வரப்போகுதுனு பேசிக்கிட்டு இருந்தாங்க. ஊரக உள்ளாட்சி தேர்தல் பத்தி ஏதோ பேசறாங்கனு கவனிச்சேன்.
'சீட்' பிடிச்சா மட்டும் போதுமா?
சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி ஆபீஸ்க்கு போயிருந்தேன். உள்ளே இருந்து வந்த ரெண்டு பேர், 'இவங்களுக்கு மாசம் பொறந்தா சம்பளம் வந்துடுது. ஆனா, எந்த வேலையும் செய்யறதே இல்ல,' என, காரசாரமா பேசிட்டு வந்தாங்க.
மக்கள பத்தி இவங்களுக்கு கவலையில்ல!
பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில், காங்., கட்சி சார்பில், லோக்சபாவில், எம்.பி., ராகுல் குறித்து பேசியதற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. அங்கு சென்றிருந்த போது, 'இதெல்லாம் நியாயமுங்களா' என, நண்பர் ஒருவர் நக்கலாக கேட்டார்.மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.,- கம்யூ., கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினாங்க. பா.ஜ., -- த.மா.கா., கட்சிக்காறங்க, சப் - கலெக்டர் கிட்ட மனு கொடுத்து, மின்கட்டணத்தை குறைக்க வலியுறுத்தினாங்க.
ஆளுங்கட்சிக்கு பாக்கெட் நிரம்புது
கிணத்துக்கடவு பஸ் ஸ்டாண்டுக்கு நண்பரை 'டிராப்' செய்ய சென்றிருந்தேன். அப்போது, கனிமவளம் 'ஓவர் லோடு' ஏற்றிய டிப்பர் லாரி வேகமாக சென்றது.