/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஆன்லைனில் வரி செலுத்த தயக்கம் ! விழிப்புணர்வு ஏற்படுத்தணும் ஆன்லைனில் வரி செலுத்த தயக்கம் ! விழிப்புணர்வு ஏற்படுத்தணும்
ஆன்லைனில் வரி செலுத்த தயக்கம் ! விழிப்புணர்வு ஏற்படுத்தணும்
ஆன்லைனில் வரி செலுத்த தயக்கம் ! விழிப்புணர்வு ஏற்படுத்தணும்
ஆன்லைனில் வரி செலுத்த தயக்கம் ! விழிப்புணர்வு ஏற்படுத்தணும்
ADDED : ஜூலை 08, 2024 01:10 AM
பொள்ளாச்சி:பொதுமக்களிடையே விழிப்புணர்வு இல்லாமை, சந்தேகம் போன்ற காரணங்களால் வரிஇனங்களை 'ஆன்லைன்' வாயிலாக செலுத்த தயக்கம் காட்டுகின்றனர்.
பொள்ளாச்சியில், நகராட்சியில் அரசின் நலத்திட்ட உதவி பெறுதல், வரி செலுத்துதல், பிறப்பு மற்றும் இறப்புசான்று பெறுதல் போன்ற, 29 சேவைகள் மற்றும் நகராட்சிகளின் அலுவலர் பணிகள் அனைத்துமே 'ஆன்லைன்' வாயிலாக பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், மக்களிடையே விழிப்புணர்வு இன்மை, சந்தேகம் போன்ற காரணங்களால் இத்திட்டம் முழுமை பெறாமல் உள்ளது. மக்கள் நேரடியாக, நகராட்சி அலுவலகம் அல்லது சேவை மையத்திற்கு சென்று, சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வரியினங்களை செலுத்தி வருகின்றனர்.
மேலும், கட்டண விபரங்கள் உடனடியாக கம்ப்யூட்டரில் பதிவு செய்து, அதற்கான ரசீது பெறுவதற்கே முனைப்பு காட்டுகின்றனர். இதனால், 'ஆன்லைன்' வாயிலாக வரிசெலுத்தும் திட்டத்தை எவரும் பின்பற்றாமல் உள்ளனர்.
நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
'ஆன்லைன்' வாயிலாக வரிசெலுத்தும் போது, குறிப்பிட்ட வரியினத்தை தேர்வு செய்து, மாநகராட்சி அல்லது நகராட்சி குறியீடு, பழைய வரிவிதிப்பு எண் ஆகியவற்றை உள்ளீடு செய்து பணத்தை செலுத்தலாம்.
இதற்கு, https://tnurbanepay.tn.gov.in/ என்ற இணையதளத்தை பயன்படுத்த வேண்டும். ஆனால், பல்வேறு சந்தேகங்கள் எழுவதால், பணம் நகராட்சிக்கு சென்றடையுமா என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
இது குறித்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நகராட்சி அலுவலகத்தில் அறிவிப்பு வைக்க வேண்டும். வெகுநேரம் காத்திருந்து வரி செலுத்துவதை தவிர்க்கவே 'ஆன்லைன்' திட்டம் கொண்டுவரப்பட்டது. இருப்பினும், குறைந்த எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே ஆன்லைனில் வரி இனங்களை செலுத்தி வருகின்றனர்.
இவ்வாறு, கூறினர்.