ADDED : ஜூலை 31, 2024 01:17 AM

கோவை;கோவையில் நீரோடை இலக்கிய அமைப்பு சார்பில் சிறுவர் நுால் வெளியீட்டு விழா கொடிசியா அரங்கில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு நீரோடை இலக்கிய அமைப்பின் நிறுவனர் மகேஷ் தலைமை வகித்தார்.
பேராசிரியர் மணிவண்ணன் மற்றும் எழுத்தாளர் நாணற்காடன் ஆகியோர் கார்த்திகா, கவின்குமார் ஆகியோர் எழுதிய நுால்களை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினர்.
எழுத்தாளர் ஈரோடு ஷர்மிளா மற்றும் கதை சொல்லி அபிநயா ஆகியோர் நுாலுக்கு மதிப்புரை வழங்கினர்.
மேலும் இயக்குனர் வெயிலோன் மற்றும் மாணவி யாழினி ஆகியோருக்கு நீரோடை கதை சொல்லி விருது வழங்கி வழங்கப்பட்டது.