Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ போஸ்டரால் அலங்கோலமான காந்திசிலை பயணியர் நிழற்கூரை

போஸ்டரால் அலங்கோலமான காந்திசிலை பயணியர் நிழற்கூரை

போஸ்டரால் அலங்கோலமான காந்திசிலை பயணியர் நிழற்கூரை

போஸ்டரால் அலங்கோலமான காந்திசிலை பயணியர் நிழற்கூரை

ADDED : ஆக 04, 2024 10:09 PM


Google News
Latest Tamil News
வால்பாறை : வால்பாறை, காந்திசிலை பஸ் ஸ்டாண்ட் நிழற்கூரையில், விதிமுறையை மீறி ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால், அலங்கோலமாக காட்சியளிக்கிறது.

வால்பாறை நகரில், காந்திசிலை பஸ் ஸ்டாண்ட், தற்காலிக பஸ் ஸ்டாண்டாக செயல்படுகிறது. அனைத்து எஸ்டேட்களுக்கும், அரசு பஸ்கள் இங்கிருந்து தான் புறப்படுகிறது.

இந்நிலையில், பயணியர் வசதிக்காக கட்டப்பட்டுள்ள நிழற்கூரையை சுற்றிலும் விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால், நிழற்கூரை அலங்கோலமாக காட்சியளிக்கிறது.

பயணியர் கூறியதாவது:

பல லட்சம் மதிப்பீட்டில் காந்திசிலை பஸ் ஸ்டாண்டில் கட்டப்பட்டுள்ள நிழற்கூரையை சுற்றியுள்ள உள்ள ஆக்கிரமிப்புக்களை நகராட்சி அதிகாரிகள் அகற்ற தயக்கம் காட்டுகின்றனர்.

இதனால், பஸ் ஸ்டாண்டிற்குள் பயணியர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது, நிழற்கூரையை சுற்றிலும் அரசியல் கட்சியினர் விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால், அலங்கோலமாக காட்சியளிக்கிறது.

நகராட்சி அதிகாரிகள் பஸ் ஸ்டாண்டை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றுவதோடு, விளம்பர போஸ்டர்களையும் அப்புறப்படுத்த வேண்டும். அத்துமீறி போஸ்டர் ஒட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us