/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பி.ஏ.பி., காண்டூர் கால்வாய் புதுப்பிப்பு பணியில் சிக்கல்; முட்டுக்கட்டை போடும் வனத்துறை பி.ஏ.பி., காண்டூர் கால்வாய் புதுப்பிப்பு பணியில் சிக்கல்; முட்டுக்கட்டை போடும் வனத்துறை
பி.ஏ.பி., காண்டூர் கால்வாய் புதுப்பிப்பு பணியில் சிக்கல்; முட்டுக்கட்டை போடும் வனத்துறை
பி.ஏ.பி., காண்டூர் கால்வாய் புதுப்பிப்பு பணியில் சிக்கல்; முட்டுக்கட்டை போடும் வனத்துறை
பி.ஏ.பி., காண்டூர் கால்வாய் புதுப்பிப்பு பணியில் சிக்கல்; முட்டுக்கட்டை போடும் வனத்துறை

பணி துவக்கம்
இதனையடுத்து, 2014ல், 240 கோடி ரூபாய் செலவில், காண்டூர் கால்வாய் புதுப்பிக்கப்பட்டது. ஆனால், கி.மீ., 30.100 முதல், 49.300 வரையான கடைசி பகுதியில், பல இடங்களில் பணிகள் நிலுவையானது. விடுபட்ட பகுதிகளை புதுப்பிக்க, 72 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
இறுதி கட்டம்
தற்போது, நல்லாறு அணை பகுதியில், 34வது கி.மீ.,, 35.500 மற்றும், 37வது கி.மீ., களில், மூன்று பிரிவுகளில், மொத்தம், 700 மீட்டர் நீளம் பணி நடக்கிறது.
முட்டுக்கட்டை
காண்டூர் கால்வாயில், ஒரு சில இடங்களில் மலையை குடைந்து, 'டனல்' வழியாக நீர் கொண்டு வரப்படுகிறது. இப்பகுதிகளில், ஆய்வு மற்றும் அவசர கால பாதிப்பை உடனடியாக சரி செய்யும் வகையில், 37வது கி.மீ.,ல், ஒரு 'டனல்' மற்றும் உயரமான மலைப்பாதையை கடக்கும் வகையில், 5.5 கி.மீ.,நீளத்திற்கு ரோடு அமைந்துள்ளது.
தடை கூடாது
ஏற்கெனவே, 60 ஆண்டுகளாக பயன்பாட்டிலுள்ள ரோட்டை புதுப்பிக்க, அனுமதி மறுப்பதால், காண்டூர் கால்வாய் கண்காணிப்பு, பராமரிப்பு மற்றும் மழை காலங்களில் வெள்ள பாதிப்புகளை தடுக்க, அவசர கால மதகுகளை திறப்பதில் பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே, கால்வாய் ரோட்டை புதுப்பிக்க வனத்துறை தடை விதிக்க கூடாது, என அதிகாரிகளும், விவசாயிகளும் வலியுறுத்தியுள்ளனர்.