/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மூடிய வடுகபாளையம் ரயில்வே கேட்டை திறக்கணும்! சப்-கலெக்டரிடம் மனு கொடுத்து வலியுறுத்தல் மூடிய வடுகபாளையம் ரயில்வே கேட்டை திறக்கணும்! சப்-கலெக்டரிடம் மனு கொடுத்து வலியுறுத்தல்
மூடிய வடுகபாளையம் ரயில்வே கேட்டை திறக்கணும்! சப்-கலெக்டரிடம் மனு கொடுத்து வலியுறுத்தல்
மூடிய வடுகபாளையம் ரயில்வே கேட்டை திறக்கணும்! சப்-கலெக்டரிடம் மனு கொடுத்து வலியுறுத்தல்
மூடிய வடுகபாளையம் ரயில்வே கேட்டை திறக்கணும்! சப்-கலெக்டரிடம் மனு கொடுத்து வலியுறுத்தல்

கள்ளுக்கு தடை நீங்குமா?
நாடார் நல சங்கத்தினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது, 'தமிழகத்தில் கள் இறக்குவதற்கு தடை, 1987ம் ஆண்டு முதல் உள்ளது. கள் இறக்குவதை தவிர வேறு தொழில் தெரியாததால் கேரளா, மைசூரு, புதுச்சேரி போன்ற வெளிமாநிலங்களுக்கு சென்று தொழில் செய்து தான் குடும்பத்தை நடத்தி வருகிறோம். பல மாநிலங்களுக்கு இடம் பெயருவதால் குழந்தைகள் சரியாக படிக்க வைக்க முடியவில்லை.
தடுப்பு அகற்றணும்
பா.ஜ., தெற்கு ஒன்றியம் சார்பில் அளித்த மனுவில், 'பொள்ளாச்சி - உடுமலை ரோடு, மரப்பேட்டை முதல் ஊஞ்சவேலாம்பட்டி வரை கடந்த, ஏழு ஆண்டுகளாக இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இது அங்கு நடந்து செல்வோர், வாகனத்தில் செல்வோருக்கு இடையூறாக அந்த தடுப்பு உள்ளது. அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, இரும்பு தடுப்புகளை அகற்ற வேண்டும்,' என, வலியுறுத்தியுள்ளனர்.
கேட்டை திறங்க!
வலிமை குடியிருப்போர் நல சங்கத்தினர் கொடுத்த மனுவில், 'பொள்ளாச்சி வடுகபாளையம் ரயில்வே கேட் மூடப்பட்டுள்ளதால், இவ்வழித்தடத்தை பயன்படுத்தி வந்த, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர்.