ADDED : ஜூன் 08, 2024 01:46 AM
கோவை:மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில், பல வகையான புத்தகங்கள் அடங்கிய நுாலகம் திறக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் சட்டம், ஆன்மிகம் என, பல வகையான புத்தகங்கள் அடங்கிய நுாலகம் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
குறிப்பாக, போலீசார் துறை சார்ந்த அறிவை வளர்த்துக்கொள்ளும் வகையில், புத்தகங்கள் அதிகம் இடம் பெற்றுள்ளன.
கமிஷனர் பாலகிருஷ்ணன் திறந்துவைத்த இந்நுாலகத்தில், 100க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.