ADDED : ஜூலை 07, 2024 11:43 PM
கோவை:மத்திய பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) நடத்திய நர்சிங் அலுவலர் பணியிடத்திற்கான எழுத்துத்தேர்வு, நேற்று கோவையில் பத்து மையங்களில் நடந்தது.
மொத்தம், 4,301 பேர் விண்ணப்பித்திருந்தனர். தேர்வு எழுத, 2,927 பேர் மட்டுமே வந்திருந்தனர்.