Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மருதமலை கோவிலில் புதிய துணை கமிஷனர்

மருதமலை கோவிலில் புதிய துணை கமிஷனர்

மருதமலை கோவிலில் புதிய துணை கமிஷனர்

மருதமலை கோவிலில் புதிய துணை கமிஷனர்

ADDED : ஜூன் 20, 2024 04:53 AM


Google News
வடவள்ளி, : மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், புதிய துணை கமிஷனர் பதவியேற்றார்.

முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில், கடந்த 2022ம் ஆண்டு முதல் துணை கமிஷனராக ஹர்சினி பணியாற்றி வந்தார். இந்நிலையில், ஹர்ஷினி, திருப்பூர் மாவட்டம், நகை சரிபார்ப்பு துணை கமிஷனராக மாற்றப்பட்டார்.

திருப்பூர் மாவட்டம் நகை சரிபார்ப்பு துணை கமிஷனராக பணியாற்றி வந்த செந்தில்குமார், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் துணை கமிஷனராக, பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

நேற்று அவர் பொறுப்பேற்றார். அவருக்கு, கோவில் பணியாளர்கள், அறங்காவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us