Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ போலீஸ் அதிகாரிகளுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி

போலீஸ் அதிகாரிகளுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி

போலீஸ் அதிகாரிகளுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி

போலீஸ் அதிகாரிகளுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி

ADDED : ஜூலை 13, 2024 11:16 PM


Google News
கோவை:கோவை மாநகர போலீஸ் அதிகாரிகளுக்கு, 9 எம்.எம்., பிஸ்டல் துப்பாக்கி சூடும் பயிற்சி நேற்று நடந்தது.

கோவை மாநகரக போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், போலீஸ் அதிகாரிகளுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்க அறிவுறுத்தியிருந்தார். இதன்படி, கோவை ரைபிள் கிளப்பில், எஸ்.ஐ., முதல் ஏ.சி., வரையிலான கோவை மாநகர காவல்துறை அதிகாரிகளுக்கு, 9 எம்.எம்., பிஸ்டலில் துப்பாக்கிச் சூடும் பயிற்சி நடத்தப்பட்டது.

இதில், 9 ஏ.சி., க்கள், 22 இன்ஸ்பெக்டர்கள், 40 எஸ்.ஐ., க்கள் என, மொத்தம், 71 பேர் பங்கேற்றனர். கடந்த சில தினங்களுக்கு முன், பங்கேற்பாளர்களுக்கு ஸ்டிரிப்பிங், அசெம்பிளிங், லோட் மற்றும் அன்லோட், இலக்கு, சுத்தம் செய்தல் மற்றும் பராமரிப்பு, பாதுகாப்பு பற்றிய பயிற்சி அளிக்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us