ADDED : ஜூன் 07, 2024 11:19 PM
பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள மகா மாரியம்மன் கோவில் முதலாமாண்டு பெருவிழா, 9ம் தேதி நடக்கிறது.
பெரியநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே மகா மாரியம்மன் கோவிலில், கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.
கோவிலின் முதலாம் ஆண்டு பெருவிழா வரும், 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை, 9.30 மணிக்கு மேல், 12.30 மணிக்குள் நடைபெற உள்ளது.
விழாவையொட்டி, வேள்வி வழிபாடுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.