ADDED : ஜூலை 20, 2024 12:12 AM
நெகமம்;நெகமம் பகுதியில் லாட்டரி விற்ற நபரை போலீசார் கைது செய்தனர். நெகமம், செட்டிபுதுரை சேர்ந்தவர் செந்தில்குமார், 50. இவர், நெகமம் பகுதியில் சட்ட விரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக, நெகமம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
செந்தில்குமாரை விசாரணை செய்ததில் லாட்டரி விற்பனை செய்வது உறுதியானதை தொடர்ந்து, அவரை கைது செய்த போலீசார், 34 லாட்டரி சீட்டுகள் மற்றும் 3,080 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.