Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பள்ளிகளுக்கு இடையே விளையாட்டு; பங்கேற்ற மாணவர்கள் அபார ஆட்டம்

பள்ளிகளுக்கு இடையே விளையாட்டு; பங்கேற்ற மாணவர்கள் அபார ஆட்டம்

பள்ளிகளுக்கு இடையே விளையாட்டு; பங்கேற்ற மாணவர்கள் அபார ஆட்டம்

பள்ளிகளுக்கு இடையே விளையாட்டு; பங்கேற்ற மாணவர்கள் அபார ஆட்டம்

ADDED : ஆக 04, 2024 11:01 PM


Google News
Latest Tamil News
கோவை : பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டியில், 1700 மாணவர்கள் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர்.

கே.பி.ஆர்., இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியின் உடற்கல்வித்துறை சார்பில், பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டிகளை கே.பி.ஆர்., இன்ஜி., கல்லுாரி முதல்வர் சரவணன் துவக்கி வைத்தார். இதில் மாணவ - மாணவியருக்கு வாலிபால், கூடைப்பந்து, த்ரோபால், கோ கோ, பூப்பந்து, ஹேண்ட்பால், கபடி, கால்பந்து ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.

இப்போட்டிகளில் 80 பள்ளிகளை சேர்ந்த 1700 மாணவ மாணவியர் பங்கேற்றனர்.

இதன் மாணவர் பிரிவு கால்பந்து அரையிறுதியில், மணி மேல்நிலைப்பள்ளி அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் தசரதன் பள்ளியையும், ஸ்டேன்ஸ் பள்ளி அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் எஸ்.எஸ்.வி.எம்., பள்ளியையும் வீழ்த்தின.

மாணவியர் கூடைப்பந்து இறுதிப்போட்டியில், கிருஷ்ணம்மாள் பள்ளி அணி 33 - 31 என்ற புள்ளிக்கணக்கில், சுகுணா பள்ளி அணியை வீழ்த்தியது.

மாணவர் பிரிவு அரையிறுதியில் சுகுணா பள்ளி அணி 40 - 39 என்ற புள்ளிக்கணக்கில் நேஷனல் மாடல் பள்ளியையும், பெர்க்ஸ் பள்ளி அணி 62 - 42 என்ற புள்ளிக்கணக்கில் ஸ்டேன்ஸ் பள்ளியையும் வீழ்த்தின.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us