/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மலக்குடல், பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு; ஒவ்வொரு மூன்றாண்டுக்கும் 17 சதவீதம் உயர்வு மலக்குடல், பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு; ஒவ்வொரு மூன்றாண்டுக்கும் 17 சதவீதம் உயர்வு
மலக்குடல், பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு; ஒவ்வொரு மூன்றாண்டுக்கும் 17 சதவீதம் உயர்வு
மலக்குடல், பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு; ஒவ்வொரு மூன்றாண்டுக்கும் 17 சதவீதம் உயர்வு
மலக்குடல், பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு; ஒவ்வொரு மூன்றாண்டுக்கும் 17 சதவீதம் உயர்வு

ஏன் இப்பாதிப்பு
உணவு பழக்கவழக்கங்களே இப்பாதிப்புக்கு முக்கிய காரணம். முன்பு, நார்சத்து அதிகம் நிறைந்த சிறுதானிய உணவுகளை நாம் எடுத்துக்கொண்டோம். தற்போது, முழுமையாக அரிசி, மைதா, துரித உணவுகள், அதிக இனிப்பு சுவை கொண்ட உணவு முறைகளை பின்பற்றுவதால் ஏற்படும் விளைவுதான். காய்கறி, பழங்கள், கீரைகள், சிறுதானிய உணவுகளை எடுத்துக்கொள்ளும் போது கழிவுகள் மலக்குடல், பெருங்குடலில் நீண்ட நேரம் தங்குவது இல்லை. ஆனால், மேற்குறிப்பிட்ட உணவுகள் எடுத்துக்கொள்ளும் போது, இரண்டு, மூன்று நாட்கள் கழிவுகள் தங்கி மெதுவாக வெளியேறுவதே முக்கிய காரணமாக உள்ளது.
அறிகுறிகள் என்னென்ன
பாரம்பரியமாக மரபு சார்ந்து இருப்பின் 40 வயது முதல் இதற்கான கொலனோஸ்கோபி ஸ்கிரீனிங் செய்துகொள்ளவேண்டியது அவசியம். பிறர், 45 வயதுக்கு மேல் அறிகுறி இருப்பின் கொலனோஸ்கோபி ஸ்கிரீனிங் செய்துகொள்ளவேண்டும். பசியின்மை, மலச்சிக்கல், எடை குறைதல், அஜீரணக்கோளாறுகள், மலத்தில் ரத்தம், மாறுபட்ட மல பழக்கம் இதற்கு முக்கிய அறிகுறியாக உள்ளது. இரண்டு வாரத்திற்கு மேல் மாறுபட்ட மல பழக்கம் இருந்தால் உடனடியாக இப்பாதிப்புக்கான ஸ்கிரீனிங் செய்து கொண்டாலே முன்கூட்டியே அறிந்துகொள்ள முடியும்.
டாக்டர்கள் கவனியுங்க
மலச்சிக்கல் பாதிப்பு இரண்டு வாரங்களுக்கு மேல் இருந்தாலே, கொலனோஸ்கோபி ஸ்கிரீனிங் பரிந்துரைக்கவேண்டியது அவசியம். இதுகுறித்த விழிப்புணர்வு டாக்டர்களுக்கு இல்லாமையால் மலச்சிக்கல், அஜீரணக்கோளாறு போன்ற பாதிப்புகளுக்கு சிகிச்சை பார்த்துவிடுகின்றனர். முன்மாதிரி திட்டத்தில் இது சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
நார்ச்சத்து அவசியம்
நார்ச்சத்து அதிகம் உள்ள தானியங்கள், கீரைகள், காய்கறிகளை அதிகம் உணவுகளில் சேர்த்துக்கொள்ளவேண்டும். பாலிஷ் செய்த அரிசியில் இச்சத்து சுத்தமாக இருக்காது. கிழங்குவகைகளில் நார்ச்சத்து இல்லை. 'கோல்டன் டயட்' என்று நாம் கூறுவது ராகி உணவுகள்; இதில், அதிக நார்ச்சத்து உள்ளன. நம் அன்றாட உணவு பழக்கத்தில் அரிசியை முழுவதுமாக தற்போது தவிர்க்க முடியாது.ஆனால், ஒரு வேளைக்காவது சிறுதானிய உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும். மைதா சார்ந்த உணவுகளை தவிர்ப்பதை காட்டிலும் தடை செய்துவிடலாம் என்ற அளவில் பாதிப்புகள் உள்ளன.