Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாநகராட்சி ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி துவக்கம்

மாநகராட்சி ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி துவக்கம்

மாநகராட்சி ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி துவக்கம்

மாநகராட்சி ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி துவக்கம்

ADDED : ஜூலை 25, 2024 11:02 PM


Google News
Latest Tamil News
கோவை : கோவை மாநகராட்சி ஊழியர்களுக்கான குழு விளையாட்டு போட்டிகள், ஆர்.எஸ்.புரம் சாஸ்திரி மைதானத்தில் நேற்று துவங்கியது.

மாநகராட்சியில் பணியாற்றும் உயர் அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு மாநகராட்சி சார்பில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. போட்டியை கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன், துணை மேயர் வெற்றிச்செல்வன் துவக்கி வைத்தனர்.

மாநகராட்சியில் பணியாற்றும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு, 40 வயதுக்கு உட்பட்டோர், 40 வயதுக்கு மேற்பட்டோர் என, இரு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஆண்களுக்கு கிரிக்கெட், கால்பந்து, வாலிபால், செஸ், இறகுப்பந்து ஆகிய போட்டிகளும், பெண்களுக்கு த்ரோபால், டென்னிகாய்ட், செஸ், கோரம், இறகுப்பந்து உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்படுகின்றன.

இப்போட்டியில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்திய மண்டலங்கள் மற்றும் மாநகராட்சி பிரதான அலுவலகம் என, ஆறு அணிகளை சேர்ந்த, 450க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

நேற்று, 40 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டிகள் துவங்கின. தொடர்ந்து, நாளை 40 வயதுக்கு மேற்பட்டோருக்கான போட்டிகள் நடத்தப்படுகின்றன.

முதல் சுற்றுப்போட்டியில் மேற்கு மண்டல அணி 4 - 1 என்ற கோல் கணக்கில் பிரதான அலுவலக அணியையும், தெற்கு மண்டல அணி 4 - 1 என்ற கோல் கணக்கில் கிழக்கு மண்டல அணியையும் வீழ்த்தின.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us