ADDED : ஜூலை 07, 2024 11:46 PM

கோவை:பதுவம்பள்ளி, நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளியில், மாணவர் பதவியேற்பு விழா நடந்தது. விழாவிற்கு உளவியலாளர் டாக்டர் ஷாலினி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
நிகழ்வில், பள்ளி மாணவர் தலைவராக ஷ்யாம், துணைத் தலைவராக சுபஹரிணி, விளையாட்டுத் தலைவராக யாழினி, நிகழ்வுகள் தலைவராக டேரியா மடோனா பதவியேற்றுக்கொண்டனர்.
மாணவர்கள் ஸ்ரீ விஷ்ணு, ஆதவன், தரிணேந்திரா மற்றும் விவின் பிரணவ் ஆகியோர் அணித்தலைவர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
பள்ளியின் கல்வி இயக்குனர் பேபி, முதல்வர் நிர்மலா, ஒருங்கிணைப்பாளர் சுமித்ரா, ஆசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.