/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் போலீசின் நடவடிக்கை எத்தனை நாள் நீடிக்கும்! பிளாக்கில் மது விற்காததால் குற்ற வழக்குகள் குறைந்தது கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் போலீசின் நடவடிக்கை எத்தனை நாள் நீடிக்கும்! பிளாக்கில் மது விற்காததால் குற்ற வழக்குகள் குறைந்தது
கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் போலீசின் நடவடிக்கை எத்தனை நாள் நீடிக்கும்! பிளாக்கில் மது விற்காததால் குற்ற வழக்குகள் குறைந்தது
கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் போலீசின் நடவடிக்கை எத்தனை நாள் நீடிக்கும்! பிளாக்கில் மது விற்காததால் குற்ற வழக்குகள் குறைந்தது
கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் போலீசின் நடவடிக்கை எத்தனை நாள் நீடிக்கும்! பிளாக்கில் மது விற்காததால் குற்ற வழக்குகள் குறைந்தது
கைது இல்லை
பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், சின்னதடாகம் உள்ளிட்ட பகுதிகளில் போலிமது விற்பனை மற்றும் கள்ள சாராயம் விற்பனை தொடர்பாக ஆய்வு மற்றும் சோதனைகள் நடந்து வருகின்றன. சட்டவிரோத சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இப்பகுதிகளில் கள்ள சாராய விற்பனை தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.
அரசு அறிவித்த நேரத்தில் மட்டுமே விற்பனை
டாஸ்மாக் நிர்வாகம், மதுபான கடை மேற்பார்வையாளர்களின் கூட்டத்தை நடத்தி, அதில் 'மதியம், 12.00 மணி முதல் இரவு, 10.00 மணி வரை அரசு அறிவித்த நேரத்தில் மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும் என, அறிவுறுத்தி உள்ளது. டாஸ்மாக் மதுபான கடையை ஒட்டி உள்ள பாரில் நிர்ணயிக்கப்பட்ட நேரங்களை தவிர, பிற நேரத்தில் மது சப்ளை செய்யப்படுகிறதா என்பதை கண்காணித்து, உரிய தகவல் தெரிவிக்க வேண்டும் என, கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். கூட்டத்தில் மதுவை மொத்தமாக கொள்முதல் செய்யும் பிரச்னையில், மதுபான கடை மேற்பார்வையாளர்கள் பலிகடா ஆக்கப்படுகின்றனர் பிரச்னைக்கு அரசு உரிய தீர்வு காண வேண்டும். அனைத்து மதுபான கடைகளிலும் 'சிசிடிவி' கேமரா பொருத்த வேண்டும்' என்றனர்.