ADDED : ஜூலை 19, 2024 11:53 PM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, காச நோயினால் பாதிக்கப்பட்டோருக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.
ஆனைமலை அருகே, வேட்டைக்காரன்புதுார் அரசு மருத்துவமனையில், காசநோயினால் பாதிக்கப்பட்ட, 30 பேருக்கு 'ஆல் தி சில்ரன்' அறக்கட்டளை சார்பில், ஊட்டச்சத்து உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தலைமை மருத்துவ அலுவலர் திருமங்கை, காசநோய் தடுப்பு மைய அலுவலர்கள் ராஜா, பிருந்தா, மணிமேகலை பங்கேற்றனர். அறக்கட்டளை சார்பில், கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சம்பத்குமார், ஊட்டச்சத்து பொருட்களை வழங்கினார்.