Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நொய்யலில் கரைபுரளும் வெள்ளம்

நொய்யலில் கரைபுரளும் வெள்ளம்

நொய்யலில் கரைபுரளும் வெள்ளம்

நொய்யலில் கரைபுரளும் வெள்ளம்

ADDED : ஜூலை 31, 2024 01:21 AM


Google News
Latest Tamil News
தொண்டாமுத்துார்;கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழை காரணமாக, நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கோவை மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக, கனமழை பெய்து வருகிறது. மலையில் உள்ள நீரோடைகளிலும், நீர் ஆர்ப்பரித்து வருவதால், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக, கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக, மேற்கு தொடர்ச்சி மலையில், பலத்த காற்றுடன், இடைவிடாமல் தொடர் கன மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக, நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது.

நொய்யால் ஆற்றின் முதல் தடுப்பணையான, சித்திரைச்சாவடி தடுப்பணையில் இருந்து, வினாடிக்கு, 1,450 கன அடி தண்ணீர் வெளியேறி வருகிறது. குளங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வாய்க்காலில், 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us