Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அரசினர் தொழிற்பயிற்சியில் சேர வரும் 31ம் தேதி வரை நீட்டிப்பு

அரசினர் தொழிற்பயிற்சியில் சேர வரும் 31ம் தேதி வரை நீட்டிப்பு

அரசினர் தொழிற்பயிற்சியில் சேர வரும் 31ம் தேதி வரை நீட்டிப்பு

அரசினர் தொழிற்பயிற்சியில் சேர வரும் 31ம் தேதி வரை நீட்டிப்பு

ADDED : ஜூலை 16, 2024 01:57 AM


Google News
வால்பாறை;வால்பாறையில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், 2024ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை கடந்த மாதம் முதல் நடக்கிறது.

எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 14 முதல், 40 வயது வரை உள்ளவர்கள், பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது வரம்பு இல்லை.

பிட்டர், எலக்ட்ரீசியன், பேஷன் டிசைன், டெக்ஸ்டைல்ஸ் மெக்கட்ரானிக்ஸ் ஆகிய படிப்பிடிற்கான விண்ணப்பங்களை நேரில் பெற்று விண்ணப்பிக்கலாம்.

பயிற்சியில் சேர்ந்த பின் மாணவர்களுக்கு, மாதம் தோறும் உதவித்தொகையாக, 750 ரூபாய் வழங்கப்படுகிறது. இலவச பஸ் பாஸ், சைக்கிள், சீருடைகள் வழங்கப்படுகின்றன. பயிற்சி முடிந்த பின், அனைவருக்கும் அரசின் சார்பில் வேலைவாய்ப்பும் வழங்கப்படுகிறது.

தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் குணசேகரன் கூறுகையில், ''பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள், தங்களது பத்தாம் வகுப்பு பள்ளிச்சான்றிதழ், ஆதார் உள்ளிட்ட விபரங்களுடன் நேரில் வர வேண்டும். வரும், 31ம் தேதி வரை சேர்க்கை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us