ADDED : ஜூலை 10, 2024 01:46 AM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி கோட்ட அளவிலான மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் இன்று நடக்கிறது.
பொள்ளாச்சி கோட்ட அளவிலான மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம், இன்று காலை, 11:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை, உடுமலை மின்பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடக்கிறது.
பொள்ளாச்சி கோட்ட அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில், கோட்டத்துக்கு உட்பட்ட மின்நுகர்வோர் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். இத்தகவலை பொள்ளாச்சி மின்வாரிய செயற்பொறியாளர் ராஜா தெரிவித்தார்.