ADDED : ஜூலை 08, 2024 11:01 PM
கோவை;ஒண்டிப்புதூர் மின்வாரிய செயற்பொறியாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நாளை (10ம் தேதி), ஒண்டிப்புதூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில், மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது.
மேற்பார்வைப்பொறியாளர் பங்கேற்கும் இக்கூட்டத்தில், காலை 10:30 முதல் பகல் 12:30 மணி வரை, மக்கள் தங்கள் குறைகளைத் தெரிவித்து, தீர்வு காணலாம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.