Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ குடிநீரை காய்ச்சி குடிங்க; சுகாதாரத்துறை  'அட்வைஸ்'

குடிநீரை காய்ச்சி குடிங்க; சுகாதாரத்துறை  'அட்வைஸ்'

குடிநீரை காய்ச்சி குடிங்க; சுகாதாரத்துறை  'அட்வைஸ்'

குடிநீரை காய்ச்சி குடிங்க; சுகாதாரத்துறை  'அட்வைஸ்'

ADDED : ஆக 04, 2024 10:05 PM


Google News
வால்பாறை: வால்பாறையில், பருவ மழை தொடரும் நிலையில், பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என, சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில், தென்மேற்குப்பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. மழையால் இங்குள்ள, ஆறு மற்றும் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், நகரில் சீதாஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டு, கடுங்குளிர் நிலவுகிறது. பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'சிதோஷ்ணநிலை மாற்றத்தால், காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் பொதுமக்கள், குடிநீரை நன்கு காய்ச்சிய பின் குடிக்க வேண்டும். வீடுகளை சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us