/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'கோட்டை எல்லாம் அழிங்க... நான் முதல்ல இருந்து சாப்பிடுறேன்!' 'கோட்டை எல்லாம் அழிங்க... நான் முதல்ல இருந்து சாப்பிடுறேன்!'
'கோட்டை எல்லாம் அழிங்க... நான் முதல்ல இருந்து சாப்பிடுறேன்!'
'கோட்டை எல்லாம் அழிங்க... நான் முதல்ல இருந்து சாப்பிடுறேன்!'
'கோட்டை எல்லாம் அழிங்க... நான் முதல்ல இருந்து சாப்பிடுறேன்!'
ADDED : ஜூலை 29, 2024 02:30 AM
கோவை;குப்பைக்கிடங்கில் தீப்பிடித்ததை அணைக்கும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு, செலவிடப்பட்ட தொகை குறித்து, சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டலால் வறுத்தெடுக்கின்றனர்.
இதனால் ஏற்பட்ட அவமானத்தை சரி செய்ய, மாநகராட்சி தரப்பில் தினம் ஒரு விளக்க அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. கடந்த, 26ம் தேதி அளிக்கப்பட்ட விளக்கத்தில், 'ஏப்., 6ம் தேதி குப்பைக் கிடங்கில் பற்றிய தீயை அணைக்க, தினமும், 13 தீயணைப்பு வாகனங்கள், ஒரு வண்டிக்கு, 14 பேர் பணிபுரிந்தனர். தண்ணீர் வினியோகிக்க தினமும், 23 - 42 லாரிகள் பயன்படுத்தப்பட்டன.
12 நாட்கள், தினமும், 500 - 600 பேர் சுழற்சி முறையில், மூன்று குழுக்களாக பிரிந்து பணிபுரிந்தவர்களுக்கு தரமான குடிநீர், உணவு, டீ வழங்கப்பட்டது. இதற்காக ரூ.27.52 லட்சம் செலவழிக்கப்பட்டது' என கணக்கு கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று மாநகராட்சி சார்பில், புதிதாக ஒரு கணக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தீ அதிகம் பரவிய, 12 நாட்கள், தினமும், 500 - 600 பேர் சுழற்சி முறையில், ஊழியர்கள், மூன்று குழுக்களாக பிரிந்து பணிபுரிந்தனர். தினமும், 600 பேர் வீதம், மூன்று சுழற்சி முறையில் மொத்தம், 1,800 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.
இவர்களுக்கு சராசரியாக, நபர் ஒன்றுக்கு ரூ.127.39 செலவிடப்பட்டது. இதன்படியே, தீத்தடுப்பு பணிக்கு ரூ.27.51 லட்சம் செலவானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.