/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஆதரவற்றோர் மீட்பு; பராமரிப்பு மையம் திறப்பு ஆதரவற்றோர் மீட்பு; பராமரிப்பு மையம் திறப்பு
ஆதரவற்றோர் மீட்பு; பராமரிப்பு மையம் திறப்பு
ஆதரவற்றோர் மீட்பு; பராமரிப்பு மையம் திறப்பு
ஆதரவற்றோர் மீட்பு; பராமரிப்பு மையம் திறப்பு
ADDED : ஜூன் 07, 2024 11:23 PM

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையத்தில் ரூ.1 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட ஆதரவற்றோர் மீட்பு, பராமரிப்பு மையத்தை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை தலைமை செயலாளர் நாகராஜன், கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார், உதவி கலெக்டர் (பயிற்சி) அங்கீத் குமார் ஜெயின், வருவாய் அலுவலர் டாக்டர் சர்மிளா உள்ளிட்டோர் திறந்து வைத்தனர்.
மேட்டுப்பாளையம் பழைய நகராட்சி அலுவலக கட்டடத்தில் ஆதரவற்றோர் மீட்பு, பராமரிப்பு மையம் கடந்த 3 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் சாலையோரம் வசிக்கும் மன நலம் பாதிக்கப்பட்டோர், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள், முதியோர், உடல்நலம் பாதிக்கப்பட்டோர் உள்ளிட்டோர் அடையாளம் கண்டு அவர்கள் மீட்கப்பட்டு இந்த மையத்திற்கு கொண்டு வரப்படுகின்றனர். பின் அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி, உணவு வழங்கப்படுகிறது. கோவை மாவட்ட நிர்வாகம், மேட்டுப்பாளையம் நகராட்சி ஆகியவற்றுடன் இணைந்து, 'ஹெல்பிங் ஹார்ட்ஸ்' என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு இந்த மையத்தை பராமரித்து வருகின்றனர்.
இந்த மையத்தில் 54 படுக்கை வசதிகள் இருந்த நிலையில், தற்போது 90 படுக்கை வசதிகள் கொண்ட மையமாக புதுபிக்கப்பட்டுள்ளது. அரங்கு, மனநலம் பாதிப்பட்டோருக்கான பயிற்சி அறை போன்றவைகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
புதுபிக்கப்பட்ட இந்த மையத்தை, தமிழக அரசின், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை தலைமை செயலாளர் நாகராஜன், கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, உதவி கலெக்டர் (பயிற்சி) அங்கீத் குமார் ஜெயின், வருவாய் அலுவலர் டாக்டர் சர்மிளா உள்ளிட்டோர் நேற்று திறந்து வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சந்திரமோகன், மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.