/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தமிழ்நாடு வேளாண் பல்கலையில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் தமிழ்நாடு வேளாண் பல்கலையில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்
தமிழ்நாடு வேளாண் பல்கலையில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்
தமிழ்நாடு வேளாண் பல்கலையில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்
தமிழ்நாடு வேளாண் பல்கலையில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்
ADDED : ஆக 04, 2024 11:03 PM
கோவை : தமிழ்நாடு வேளாண் பல்கலை மாணவர் நல இயக்குனரகம் கீழ், நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நடக்கிறது. இதில், இரண்டாமாண்டு மாணவர்கள் 573 பேர் பங்கேற்றுள்ளனர்.
இம்முகாம், போளூவாம்பட்டி தென்கரையில் துவங்கியது. தொடர்ந்து, 8ம் தேதி வரை செல்லப்பன் கவுண்டன்புதுார், சென்னனுார், மத்திபாளையம், கரடிமடை, குப்பனுார், ஆகிய கிராமங்களில் நடைபெறவுள்ளது.
துணைவேந்தர் கீதாலட்சுமி முகாமை துவக்கிவைத்தார். இதில், மாணவர் நலத்துறை டீன் மரகதம், நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகதீஸ்வரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, பல்வேறு சமூக பணிகளில் மாணவர்கள் ஈடுபடவுள்ளனர்.